சென்னை பாரிமுனை பகுதியில் கடந்த 4 மாதங்களாக செயல்படாமல் இருந்த பூக்கடைகள் நேற்று கடும் கட்டுப்பாடுகளுடன் செயல்படத் தொடங்கின.
சென்னையில் ராயபுரம் மண்டலத்தில்தான் அதிக அளவில் கரோனா தொற்று ஏற்பட்டது. அதன் காரணமாக அம்மண்டலத்தில் பல்வேறு பகுதிகளில் சாலை முழுவதும் அடைக்கப்பட்டன. அதன் காரணமாக கொத்தவால் சாவடி, பாரிமுனை பகுதிகளில் இயங்கி வந்த காய்கறி மற்றும் பூ மொத்த விற்பனை கடைகளும் மூடப்பட்டன. இம்மண்டலத்தில் தற்போது தொற்று வெகுவாகக் குறைந்துள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் பிராட்வே பேருந்து நிலையத்தில் காய்கறி கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பூக்கடைகளை திறக்கவும் அனுமதிக்குமாறு பூ வியாபாரிகள், மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
குடை வழங்கல்
உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிப்போம் என உறுதி அளித்தால் கடைகளை திறக்க அனுமதிக்கப்படும் என்றுமாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். இதைத் தொடர்ந்து நேற்றுமுதல் பாரிமுனை பகுதிகளில் பூ மொத்த விற்பனை தொடங்கியது.
பூக்களை வாங்கிச் செல்ல வரும்வியாபாரிகளின் கைகளில் முதலில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. தொடர்ந்து அவர்களுக்கு குடைவழங்கப்படுகிறது. அதன் மூலம் அங்கு வியாபாரிகள் போதிய இடைவெளியுடன் நிற்கஏதுவாக அமைகிறது. ஒவ்வொருவியாபாரியும் உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி மூலமாக பரிசோதித்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
கடைகளுக்கு ஒரு வழியில் சில்லறை வியாபாரிகள் அனுமதிக்கப்பட்டு, மற்றொறு வழியில்வெளியே செல்ல வகை செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் சில்லறை வியாபாரிகளிடமிருந்து குடைகளை வியாபாரிகள் சங்கத்தினர் பெற்றுக்கொள்ளும் வசதியை ஏற்படுத்தியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
விளையாட்டு
4 hours ago
க்ரைம்
4 hours ago
உலகம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
வேலை வாய்ப்பு
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
கல்வி
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago