சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் விதி 110-ன் கீழ் அறிக்கை அளித்த முதல்வர் ஜெயலலிதா, ‘‘தமிழகத்தில் புதிதாக 16 வட்டங்களும், 5 வருவாய் கோட்டங்களும் உருவாக்கப்படும்’’ என அறிவித்தார்.
இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்து செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி), உ.தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), பி.வி.கதிரவன் (பார்வர்டு பிளாக்), ஏ.ராமசாமி (புதிய தமிழகம்), ஏ.அஸ்லம் பாட்சா (மமக) ஆகியோர் பேசினர். தொடர்ந்து, மேல்மலை யனூரில் புதிய வட்டம் உருவாக்கப்படும் என்று அறிவித்ததற்காக செஞ்சி தொகுதி பாமக உறுப்பினர் ஏ.கணேஷ்குமார், சூளகிரி வட்டம் அறிவித்ததற்காக ஒசூர் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் கே.கோபிநாத், பேர்ணாம்பட்டு வட்டத்தை அறிவித்ததற்காக குடியாத்தம் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் கு.லிங்கமுத்து ஆகியோர் முதல்வருக்கு நன்றி தெரிவித்து பேசினர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
17 mins ago
விளையாட்டு
2 hours ago
க்ரைம்
2 hours ago
உலகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
வேலை வாய்ப்பு
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
கல்வி
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago