தமிழகத்தில் இன்று 4,244 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 38 ஆயிரத்து 470 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் 1,168 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 77 ஆயிரத்து 338 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்றைய (ஜூலை 12) கரோனா தொற்று நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரங்கள்:
''தமிழகத்தில் இன்று 4,244 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 38 ஆயிரத்து 470 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 42 ஆயிரத்து 531 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 16 லட்சத்து 9 ஆயிரத்து 448.
இன்று மட்டும் கரோனா பரிசோதனை செய்யப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 325. இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 42 ஆயிரத்து 234.
இன்று ஒரே நாளில் 3,617 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்து 532 பேர்.
தற்போது வரை 46 ஆயிரத்து 969 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று கரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 1,168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 77 ஆயிரத்து 338 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் கரோனா தொற்றால் அரசு மருத்துவமனைகளில் 43 பேர், தனியார் மருத்துவமனைகளில் 25 பேர் என மொத்தம் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 1,966 ஆக உயர்ந்துள்ளது.
இன்று உயிரிழந்தவர்களுள் ஏற்கெனவே இணை நோய்கள் உள்ளவர்கள் 60 பேர். இணை நோய் அல்லாதவர்கள் 8 பேர்.
அரசு சார்பாக 53 மற்றும் தனியார் சார்பாக 52 என மொத்தம் 105 கரோனா பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளன''.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 min ago
இந்தியா
38 mins ago
இந்தியா
42 mins ago
இந்தியா
51 mins ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
உலகம்
2 hours ago
வணிகம்
3 hours ago
சினிமா
3 hours ago
இந்தியா
2 hours ago