திருப்பத்தூர் அருகே கரோனா அச்சத்தால் மரத்தடியில் செயல்பட்ட  காவல்நிலையம் 

By இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கரோனா அச்சத்தால் மரத்தடியில் காவல்நிலையம் செயல்பட்டது.

திருப்பத்தூர் அருகே நாச்சியாபுரம் காவல் நிலையத்தில் 2 எஸ்ஐகள் மற்றும் 2 காவலர்கள் ஆகிய 4 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல் நிலையம் முழுவதும் இன்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

கரோனா அச்சத்தால் இன்று முழுவதும் அருகேயுள்ள மரத்தடியில் காவலர்கள் தங்களது பணிகளை மேற்கொண்டனர். சிவகங்கை மாவட்டம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து காவலர்களுக்கு தொற்று பரவி வருவதால் அவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

மேலும் இன்று சிவகங்கை, காரைக்குடி, திருப்புவனம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 50 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இருவர் இறந்தனர், 46 பேர் குணமடைந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

இந்தியா

57 mins ago

ஜோதிடம்

54 mins ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்