ஈரோடு மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கு எம்.எல்.ஏ.க்கள், கே.வி.ராமலிங்கம், கே.எஸ் தென்னரசு ஆகியோர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து எம்.எல்.ஏ . கே.வி.ராமலிங்கம் கூறியதாவது:
ஈரோடு மாநகர், மாவட்ட அதிமுக சார்பில், ஈரோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட 6 ஊராட்சிகளிலும், சென்னிமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட 6 ஊராட்சிகளிலும், நசியனூர் சித்தோடு பேரூராட்சிகளில் 30 ஆயிரம் குடும்பங்களுக்கும் அரிசி காய்கறி தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மேற்கு தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி 27-வது வார்டில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்கப்பட்டது. ஈரோடு ராஜாஜிபுரம் பகுதியில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு மேற்கு தொகுதிக்கு உட்பட்ட ஒரு லட்சம் குடும்பங் களுக்கு எனது சொந்த செலவில் காய்கறிகள், அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது, என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
13 mins ago
சினிமா
29 mins ago
சினிமா
38 mins ago
சினிமா
41 mins ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
தமிழகம்
39 mins ago
சினிமா
57 mins ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
தமிழகம்
51 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago