தூத்துக்குடியில் மீனவப் பகுதியான திரேஸ்புரத்தில் 40-க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முறையான சிகிச்சை, சாப்பாடு வழங்கப்படவில்லை எனக் கூறி, அங்கு 200-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர்.
அங்கு வைக்கப்பட்டிருந்த சாலை தடுப்புகளை தூக்கி வீசினர். கரோனா பரிசோதனைக்காக வந்த பணியாளர்களை விரட்டிய டித்தனர். இதையடுத்து, மருத்துவ மனையில் குறைபாடுகள் இருந்தால் நிவர்த்தி செய்யப் படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் மக்கள் கலைந்து சென்றனர்.
இதேபோல், திரேஸ்புரம் நாட்டுப்படகு மீனவர் பொதுப்பஞ்சாயத்து தலைவர் ராபர்ட் தலைமையிலான 100 மீனவர்கள் மீன்வளத்துறை இணை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நாட்டுப் படகு மீனவர் களை கடலுக்குச் செல்ல அனும திக்க வேண்டும் என வலியுறுத்தினர். கரோனா தொற்றின் தாக்கம் குறைந்ததும் மீன்பிடிக்கச் செல்லலாம் என அதிகாரிகள் கூறினர். இதையடுத்து மீனவர்கள் கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
30 mins ago
சினிமா
2 hours ago
விளையாட்டு
3 hours ago
வணிகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
க்ரைம்
4 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
க்ரைம்
5 hours ago
இந்தியா
5 hours ago
சினிமா
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago