கொந்தகையில் குழந்தை எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

By இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகையில் நடைபெறும் அகழாய்வில் குழந்தை எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

திருப்புவனம் அருகே கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணி பிப்.19-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களில் பணிகள் நடந்து வருகின்றன. அவற்றில் செங்கல் கட்டுமானம், விலங்கு எலும்பு, மனித எலும்புகள், மண் பானைகள், ஓடுகள், சிறிய உலைகலன், எடைக் கற்கள், நீள வடிவ பச்சை நிறப் பாசிகள் கண்டெடுக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று கொந்தகை அகழாய்வில் மேலும் ஒரு குழந்தை எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

இது ஏற்கெனவே ஜூன் 18-ம் தேதி இதே பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தையின் எலும்புக்கூடை ( 75 செ.மீ.,) விடச் சிறியது.

இந்த எலும்புக்கூட்டை மரபணு ஆய்வு செய்தபிறகே எலும்புக்கூட்டின் காலம், வயது, ஆணா, பெண்ணா போன்ற விபரங்கள் தெரியவரும். இதன்மூலம் இப்பகுதி ஈமக்காடாக இருந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

10 mins ago

தமிழகம்

4 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

40 mins ago

இந்தியா

34 mins ago

தமிழகம்

51 mins ago

வாழ்வியல்

42 mins ago

இந்தியா

56 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்