சென்னை அருகே கடலில் சிக்கித் தவித்த இலங்கை மீனவர்கள் 6 பேர் மீட்பு

By செய்திப்பிரிவு

சென்னை அருகே கடல் பகுதியில் சிக்கித் தவித்த இலங்கையைச் சேர்ந்த 6 மீனவர்களை இந்தியக் கடலோரக் காவல்படையினர் மீட்டனர்.

சென்னையின் கிழக்கு கடற்பகுதியில் 170 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடல் சீற்றத்தில் சிக்கி, மீனவர் படகு ஒன்று மூழ்குவதாகவும், அதில் உள்ள மீனவர்களை மீட்க உதவும்படி, விசாகப்பட்டினம் நோக்கிச் சென்று கொண்டிருந்த வணிகக் கப்பலின் கேப்டன், மும்பையில் உள்ள இந்தியக் கடற்படையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு தகவல் அளித்தார்.

உடனே, அங்கிருந்த அதிகாரிகள் சென்னையில் உள்ள இந்தியக் கடற்படையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்குத் தகவல் அளித்தனர். அதைத்தொடர்ந்து, கடலோர காவல்படையினர் சம்பவ இடத்துக்கு சென்று, அங்கு கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 6 மீனவர்களை மீட்டனர்.

அவர்கள் இலங்கை, திரிகோணமலையைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. அவர்களை சொந்தநாட்டுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளது. பாதுகாப்புத் துறை பத்திரிகை தகவல் அலுவலகம்வெளியிட்டுள்ள செய்தியில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

26 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்