கரோனா தொற்று பாதிப்பு நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்தை கடந்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கெனவே பெருந்தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2,037 ஆக இருந்தது. நேற்று மேலும் 114 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது தெரிந்தது. எனவே, இம்மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2,151 ஆக உயர்ந்தது. 25 பேர் இங்கு உயிரிழந்துள்ளனர்.
இதுபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதிப்பு 5,632 ஆக இருந்தது. நேற்று வந்த பரிசோதனை முடிவுகளில் 175 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இதனால் இங்குபாதித்தவர்கள் எண்ணிக்கை 5,807 ஆக உயர்ந்தது. இவர்களில் 96 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3,995 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று புதிதாக 172 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,167 ஆக உயர்ந்துள்ளது. 79 பேர் உயிரிழந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
2 hours ago
ஆன்மிகம்
1 hour ago
கருத்துப் பேழை
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago