விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காவலர் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் பணியாற்றிய காவல் நிலையம் பூட்டப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நத்தம்பட்டி காவல் நிலையத்தில் காவலராப் பணியாற்றி வந்த ஒருவர் ஸ்ரீவில்லிபுத்தூர்- மதுரை நெடுஞ்சாலையில் அழகாபுரிவிலக்கு அருகே உள்ள காவல் சோதனைச் சாவடியில் பணியாற்றி வந்தார். அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது.
அதையடுத்து, அவர் பணியாற்றிய நத்தம்பட்டி காவல் நிலையம் பூட்டப்பட்டுள்ளது. மேலும், அங்கு பணியாற்றிய 50-க்கும் மேற்பட்ட காவலர்களுக்கும் கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள காவலரின் குடும்பத்தினருக்கும் நேற்று கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், பரிசோதனை செய்துகொண்ட காவலர்கள் அனைவரும் பரிசோதனை முடிவு வரும் வரை வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
21 mins ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
வணிகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
க்ரைம்
4 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
க்ரைம்
5 hours ago
இந்தியா
5 hours ago
சினிமா
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago