கரோனா தொற்று நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் காணொலிக் காட்சியில் நேற்று உரையாடினார். புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்தபடி முதல்வர் நாராயணசாமியும் இந்த உரையாடலில் பங்கேற்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கரோனா ஊரடங்கால் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் மாநிலங்களுக்கு மத்திய அரசு தாராளமாக நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
புதுச்சேரியின் எல்லைகளை திறந்து விட்டதால் வெளி மாநிலத்தவர்கள் மூலம் தொற்று வேகமாக பரவிவிட்டது. எனவே, புதுச்சேரி மாநில எல்லைகள் இன்று(ஜூன் 17) முதல் முழுவதுமாக மூடப்படும். சென்னை, விழுப்புரம், கடலூரில் இருந்து புதுச்சேரி வரும் எல்லைகளும், நாகை, மயிலாடு துறையில் இருந்து காரைக்கால் வரும் எல்லைகளும் மூடப்படும்.
புதுச்சேரிக்குள் வெளிமாநில மக்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். புதுச்சேரியில் கடைகள் திறக்கும் நேரம் குறித்து இன்று கடை உரிமையாளர்களுடன் பேசி, நேரம் நிர்ணயிக்கப்படும் என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
20 mins ago
இந்தியா
31 mins ago
சினிமா
32 mins ago
இந்தியா
1 hour ago
வணிகம்
9 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago
சுற்றுலா
2 hours ago
கல்வி
1 hour ago
தமிழகம்
2 hours ago
சுற்றுலா
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago