தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு 5 மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் கோவை,நீலகிரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னகல்லாறில் 2 செமீ மழை பெய்துள்ளது.
வடக்கு ஆந்திர கடலோரப் பகுதியில் நிலவிவந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்துவிட்டது. கேரளா, கர்நாடக கடலோரப் பகுதி, லட்சத்தீவு, தென்மேற்கு,மத்திய மேற்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளதால், அப்பகுதிகளுக்கு 15-ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
சினிமா
4 hours ago
விளையாட்டு
5 hours ago
வணிகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
க்ரைம்
7 hours ago
சுற்றுச்சூழல்
8 hours ago
க்ரைம்
8 hours ago
இந்தியா
8 hours ago
சினிமா
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago