தமிழகத்தில் 2 கோடி குடும்ப அட்டைகளுக்கு தலா 2 முகக் கவசங்கள்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகளில் அடங்கிய ஒவ்வொருவருக்கும் தலா 2 முகக் கவசங்கள் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, 2 கோடியே8 லட்சத்து 23 ஆயிரத்து 76 குடும்பஅட்டையின் கீழ் வரும், 6 கோடியே74 லட்சத்து 15 ஆயிரத்து 899 உறுப்பினர்களுக்கு தலா 2 முகக் கவசம்வீதம் 13 கோடியே 48 லட்சத்து798 மீண்டும் பயன்படுத்தக் கூடிய முகக் கவசங்கள் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முகக்கவசங்களை கொள் முதல் செய்ய வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில், 7 பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

42 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்