உம்பன் புயல் எதிரொலி: தூத்துக்குடி துறைமுகத்தில்  2-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

By ரெ.ஜாய்சன்

வங்கக்கடலில் உருவாகியுள்ள உம்பன் புயல் அதிதீவிர புயலாக மாறுவதால் தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 2-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வழங்கக்கடலில் உருவான உம்பன் புயல் காரணமாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் நேற்று 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இந்நிலையில் உம்பன் புயல் அதிதீவிர புயலாக மாறி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்றப்பட்ட புயல் எச்சரிக்கை கூண்டு இன்று 2-ம் எண்ணுக்கு உயர்த்தப்பட்டது.

உம்பன் புயல் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்