ஆதியோகி திவ்ய தரிசன 3-டி ஒளி, ஒலி காட்சிக்கு சர்வதேச தொழில்நுட்ப விருது

By செய்திப்பிரிவு

கோவை ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயர ஆதியோகி சிலை நிறுவப்பட்டுள்ளது. இங்கு நடத்தப்படும் `ஆதியோகி திவ்ய தரிசனம்' என்ற 3-டி ஒளி, ஒலி காட்சிக்கு சர்வதேச தொழில்நுட்ப விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஒளி-ஒலி காட்சியை வடிவமைத்த `ஆக்சிஸ் 3-டி' ஸ்டுடியோவுக்கு, மோன்டோ டி.ஆர். என்ற சர்வதேச தொழில்நுட்ப இதழ் இவ்விருதை வழங்கி கவுரவித்துள்ளது. இந்த விருதுக்காக, இங்கிலாந்தில் இரு தேவாலயங்கள், பிரான்ஸில் ஒரு தேவாலயம் உட்பட ஐரோப்பா, மத்தியக் கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா-பசிபிக் நாடுகளில் இருந்து பலர் தேர்வுப்பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். முடிவில் ஆதியோகி திவ்யதரிசனம் விருதை பெற்றுள்ளது.

இந்த 3-டி ஒளி, ஒலி காட்சி சனி, ஞாயிற்றுக்கிழமைகள், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் நடத்தப்படுகிறது. தற்போது கரோனா பிரச்சினையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று ஈஷா யோகா மையத்தினர் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 min ago

இந்தியா

26 mins ago

விளையாட்டு

49 mins ago

தமிழகம்

49 mins ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

வணிகம்

1 hour ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

மேலும்