சிவகங்கை மாவட்டத்தில் 6 நாட்களாக புதிதாக கரோனா தொற்று இல்லை: இதுவரை 771 பேருக்கு பரிசோதனை

By இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக நேற்று வரை புதிதாக ஒருவர் கூட கரோனா தொற்று இல்லாதது ஆறுதல் அளிப்பதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். மேலும் இதுவரை 771 பேருக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே திருப்பத்தூரில் 9 பேர், இளையான்குடி, தேவகோட்டை, காரைக்குடியில் தலா ஒருவர் என 12 பேருக்கு கரோனா தொற்று இருந்தது. அதுதவிர ராமநாதபுரம் மாவட்டத்தில் 14 பேர் பாதிக்கப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் ஏற்கெனவே சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர் என 8 பேர் குணமடைந்தனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் 6 நாட்களாக புதிதாக ஒருவர் கூட கரோனா தொற்று இல்லை. மேலும் 6 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இது ஆறுதல் அளிப்பதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

மேலும் சிகிச்சையில் உள்ள 6 பேரில் 5 பேர் இன்று குணமடைந்து வீட்டிற்கு சென்றனர். மேலும் சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 771 பேருக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

சினிமா

6 mins ago

சினிமா

9 mins ago

வலைஞர் பக்கம்

13 mins ago

சினிமா

18 mins ago

சினிமா

23 mins ago

இந்தியா

31 mins ago

க்ரைம்

28 mins ago

இந்தியா

34 mins ago

தமிழகம்

56 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்