சிதம்பரத்தில்  பிஹார் கட்டுமான தொழிலாளர்களுக்கு உணவு அளித்த ஜெயின் சங்கம்

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ்நாடு காவலர் குடியிருப்பு கட்டுமான பணிக்காக பிஹார் கட்டுமான தொழிலாளர்கள் 70 பேர் தங்கி கட்டுமான பணியினை செய்து வந்தனர்.

இந்த நிலையில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக கட்டுமான பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டது. சிதம்பரத்தில் தமிழ்நாடு காவலர் குடியிருப்பு கட்டுமான பணிகளும் நிறுத்தப்பட்டது.

இப்பணிகளில் வேலை செய்த 70 பிஹார் தொழிலாளர்கள் கடைகள் மூடப்பட்டதால் உணவின்றி தவித்து வந்தனர். இதனை அறிந்த சிதம்பரம் மகாவீர் ஜெயின் சங்கத்தினர் அவர்களுக்கு உணவளித்து கரோனா தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
சட்டப்பேரவை உறுப்பினர் பாண்டியன் கலந்து கொண்டு உணவு வழங்கினார்.

நகராட்சி ஆணையாளர் சுரேந்திர ஷா, டிஎஸ்பி கார்த்திகேயன்,ஜெயின் சங்க தலைவர் லலித்குமார், செயலாளர் கமல்கிஷோர் போத்ரா, பொருளாளர் அஜித் ராஜ், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த சங்கத்தினர் அவர்களுக்கு 3 வேளையும் தொடர்ந்து உணவளித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

19 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்