தேனி மாவட்டம், வருசநாடு மலையில் கடமலைக்குண்டு அருகே உள்ள கரட்டுப்பட்டியில் 24 பளியர் குடும்பத்தினர் வசிக் கின்றனர். இவர்களுக்கு அரசின் கரோனா நிவாரணம் வழங்கப் படவில்லை எனத் தகவல் வெளி யானது.
இதுகுறித்து ஆண்டிபட்டி வட்டாட்சியர் கா.சந்திரசேகரன் கவனத்துக்குக் கொண்டு சென்ற போது, நிவாரணத் தொகை ரூ.1,000-ம் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இதுபற்றி பளியர் குடும்பத்தினர் சிலரிடம் கேட்டபோது, ரேஷன் கார்டு வைத்துள்ள 14 குடும்பங் களுக்கு மட்டுமே நிவாரணம் கிடைததுள்ளது என்றனர்.
இதுகுறித்து துணை முதல்வர் அலுவலக கவனத்துக்கு ‘இந்து தமிழ்' நாளிதழ் கொண்டு சென்றது. அதன்படி, ரேஷன் கார்டு இல்லாத குடும்பத்தினருக்கும் நிவாரணத் தொகை, உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டதாக மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் அண்ணா தெரிவித் தார்.
இதேபோல ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ மகாராஜனும் பளியர் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகளை வழங்கினார்.
முக்கிய செய்திகள்
சினிமா
48 mins ago
விளையாட்டு
1 hour ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
க்ரைம்
3 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
க்ரைம்
4 hours ago
இந்தியா
4 hours ago
சினிமா
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
சுற்றுலா
5 hours ago