மாநிலங்களவை தேர்தல்: திமுக வேட்பாளர்கள் 3 பேர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

மாநிலங்களவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் 3 பேரின் பட்டியலை கட்சியின்தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் (அதிமுக-4, திமுக-1, மார்க்சிஸ்ட்-1) பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த இடங்களுக்கு 6 புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 26-ம் தேதி நடக்கிறது.

இந்த தேர்தலில் அதிமுக, திமுகவுக்கு தலா 3 இடங்கள் இடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவைமுந்திக்கொண்டு திமுக தனது வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் "மார்ச் 26-ல் நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களாக திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் போட்டியிடுவார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி சிவா ஏற்கெனவே மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். அந்தியூர் செல்வராஜ் முன்னாள் அமைச்சராவார். என்.ஆர்.இளங்கோ, வழக்கறிஞர், கடந்த 2014-ம் ஆண்டு அரக்கோணம் மக்களவைத் தொகுதி தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். கடந்த ஆண்டு நடந்தமாநிலங்களவை தேர்தலில் மதிமுகபொதுச் செயலர் வைகோவுக்கு மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

1 hour ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்