தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அகில இந்திய காங்கிரஸ் அறிவுரையின் பேரில் தமிழக காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்களவை முன்னாள் உறுப்பினர்கள் ஜே.எம்.ஆருண், எஸ்.எஸ்.ராமசுப்பு, காங்கிரஸ் மாநில பொருளாளர் நாசே ராமச்சந்திரன், ஊடகப் பிரிவு மாநிலத் தலைவர் ஆ.கோபண்ணா, மாநில பொதுச்செயலாளர்கள் கே.தணிகாசலம், டி.செல்வம், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் டி.என்.முருகானந்தம், வழக்கறிஞர்கள் ஏ.பி.சூரியபிரகாசம், எஸ்.கே.நவாஸ், மத்திய சென்னை மாவட்ட எஸ்.சி. பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் ஆகியோர் இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழுவின் முதல் கூட்டம், மார்ச் 6-ம் தேதி காலை 11 மணிக்கு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் எனது தலைமையில் நடக்கும்.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
உலகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
4 hours ago
சினிமா
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
8 hours ago