வேளாங்கண்ணி கடற்கரையில் ஒதுங்கிய மரப்பெட்டியில் போதைப்பொருள்

By செய்திப்பிரிவு

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த செருதூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய மரப்பெட்டியில் போதைப் பொருளான ஹெராயின் இருந்தது தெரியவந்தது.

செருதூர் கடற்கரையில் மரப்பலகையால் செய்யப்பட்ட பெட்டி ஒன்று கடலில் மிதந்து வந்து நேற்று கரை ஒதுங்கியது. இதைப் பார்த்து சந்தேகம் அடைந்த மீனவர்கள் கடலில் மர்ம பெட்டி மிதந்து வந்ததாக கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஹெராயின் கடத்தல்

இதையடுத்து, விரைந்து வந்த கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் மரப்பெட்டியைக் கைப்பற்றி சோதனை செய்தனர். அதில், போதைப் பொருளான ஹெராயின் பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த மரப்பெட்டியை சுங்கத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மரப்பெட்டியை பெற்றுக்கொண்ட சுங்கத் துறை அதிகாரிகள், மரப்பெட்டி எங்கிருந்து வந்தது? என்று விசாரித்து வருகின்றனர்.

போதைப்பொருளின் மதிப்பு என்ன என்பது குறித்து திருச்சியில் இருந்து உயரதிகாரிகள் வந்து விசாரித்த பின்னரே தெரியவரும் என்று சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுவே முதல் முறை

மேலும், மரப்பலகையால் செய்யப்பட்ட பெட்டியில் வைத்து ஹெராயின் கடத்துவது இப்பகுதியில் இதுவே முதல் முறை என்று சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

41 mins ago

கருத்துப் பேழை

37 mins ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

21 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்