மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் 2 ஆசிரியர்களை குற்றவாளிகள் என அறிவித்துள்ள உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக 2 பேரையும் விடுதலை செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்துள்ளது.
செங்கல்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அந்த பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர்களான நாகராஜ் மற்றும் புகழேந்தி ஆகியோர் மீது கடந்த 2012-ம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்டது. அதையடுத்து இருவர் மீதும் செங்கல்பட்டு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த செங்கல்பட்டு நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு அவர்கள் இருவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், ‘‘இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 2 ஆசிரியர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உள்ளன. இவர்களின் அத்துமீறல்களினால் 4 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட ஒரு மாணவி சாட்சியம் அளித்தாலே போதுமானது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த 2 ஆசிரியர்களையும் குற்றவாளிகள் என இந்த நீதிமன்றம் முடிவு செய்கிறது. எனவே அவர்களை விடுதலை செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன். தண்டனை அறிவிப்புக்காக இருவரும் பிப்.25 அன்று நேரில் ஆஜராக வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 mins ago
தமிழகம்
25 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
ஜோதிடம்
24 mins ago
ஜோதிடம்
1 hour ago
இந்தியா
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago