கரோனா அச்சுறுத்தல்: ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட கப்பலில் தவிக்கும் கணவரை மீட்டுத்தர மதுரை பெண் கோரிக்கை

By எஸ்.ஸ்ரீனிவாசகன்

கரோனா அச்சத்தால், ஜப்பான் நாட்டின் ஒக்காஹாமா துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட கப்பலில் சிக்கித் தவிக்கும் தனது கணவரை மீட்டுத்தருமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் மதுரையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ளது நாகமலை புதுக்கோட்டை. இங்குள்ள வடிவேல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் (வயது 41). அன்பழகனுக்குத் திருமணமாகி மனைவி மல்லிகா மற்றும் மகள் பிரியதர்ஷினி மகன் சுரேஷ்குமார் ஆகியோர் உள்ளனர்.

இவர் கடந்த 14 வருடங்களாக கப்பலில் பணிபுரிந்து வருகிறார். தற்போது ஜப்பான் நாட்டில் கரோனா பாதிப்பு இருக்கலாம் என்ற அச்சத்தால் ஒக்காஹாமா துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கப்பலில் இருக்கிறார்.

அண்மையில் சீனா சென்று திரும்பிய இந்தக் கப்பலில் கரோனா நோய் தொற்று கொண்டோர் இருக்கலாம் என்ற அச்சத்தால் கப்பல் துறைமுகத்திலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கப்பலில், மதுரை அன்பழகன், திருச்சி ஜெயராஜ் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேரும் இந்தியாவைச் சேர்ந்த மொத்தம் 166 பேரும் உள்ளது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தனது கணவர் அன்பழகன் உள்பட அனைவரையும் பத்திரமாக மீட்க தமிழக அரசும். மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மனைவி மல்லிகா கோரிக்கை விடுத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 mins ago

கருத்துப் பேழை

4 mins ago

சுற்றுலா

41 mins ago

சினிமா

46 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

3 hours ago

மேலும்