கடன் சுமை, பட்டினி போன்ற காரணங்களினால் தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் 68 விவசாயி கள் தற்கொலை செய்துகொண்டுள் ளனர் என்றார் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் அக்கட்சியின் சார் பில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தமிழ்நாட்டில் 99 லட்சம் இளை ஞர்கள் உட்பட இந்தியாவில் 10 கோடி பேர் வேலைவாய்ப்பின்றித் தவிக்கின்றனர். கடந்த சில ஆண்டு களில் மட்டும் இந்தியாவில் 1.22 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் மட்டும் 68 விவசாயிகள் கடன் சுமை யாலும், பட்டினியாலும் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக மத்திய அரசின் புள்ளி விவரம் தெரிவிக் கின்றது.மத்தியிலும், மாநிலத்தி லும் ஆட்சிகள் மாறினாலும் வேலை வாய்ப்பை உறுதி செய்வ திலோ, விவசாயிகளைக் காப்பாற்று வதிலோ எந்த அரசும் அக்கறை காட்டாததால்தான் இந்த நிலை தொடர் கிறது. டாஸ்மாக் மதுக்கடை களால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறி யாகிவிட்டது.
இப்போது தமிழ்நாட்டில் மட்டும் ஒரு கோடி பேர் குடிக்கிறார்கள். தமிழகம் அழிந்தது மதுவால்தான் என்ற நிலை ஏற்படுவதற்கு முன்ன தாக அரசு மதுபான விற்பனைக்கு முடிவு கட்ட வேண்டும் என்றார்.
கூட்டத்தில், மாவட்டச் செய லாளர் த.செங்கோடன், விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் மு.மாதவன், ஒன்றியச் செயலாளர் ஆர்.சொர்ணக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
விளையாட்டு
3 hours ago
க்ரைம்
4 hours ago
உலகம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
வேலை வாய்ப்பு
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
கல்வி
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago