மதுரையில் அரசுப் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்: வன்முறையில் சேதமாவதைத் தடுக்க காவல் ஆணையர் நடவடிக்கை

By எஸ்.ஸ்ரீனிவாசகன்

போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பந்த் போன்ற காலங்களில் போராட்டக்காரர்கள் அரசு வாகனங்களை சேதப்படுத்துவதைத் தவிர்க்க மதுரையில் அரசு வாகனங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

பொதுவாகவே மக்கள் அதிகமாக திரண்டு போராட்டங்கள் நடத்தும்போது வன்முறைக்கு வாய்ப்பு ஏற்படுகிறது. சில நேரங்களில் அரசு வாகனங்கள் மற்றும் அரசு சொத்துக்களை சேதப்படுத்தும் நோக்கில் சிலர் வன்முறைகளைக் கையாள்கின்றனர்.

மதுரை மாநகரில் இத்தகைய வன்முறைகளைத் தடுக்கும் பொருட்டு அரசு வாகனங்களில் சிசிடிவி கேமரா பொருத்த மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, இன்று (ஜன.8) அரசு போக்குவரத்து வாகனங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டது.

அரசு வாகனங்களை சேதப்படுத்துபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கும் விதமாக மதுரை நகரில் உள்ள அனைத்து பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

க்ரைம்

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்