‘குடிப்பிரியர்கள் போன் செய்தால் பாக்கெட் சாராயம் சப்ளை’ : விருதாச்சலம் அருகே விஷ சாராயத்திற்கு  இரண்டு பேர் பலி 

By ந.முருகவேல்

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே சிறுபாக்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வள்ளிமதுரம் கிராமத்தில் போன் செய்தால் இருசக்கர வாகனத்தில் வந்து பாக்கெட் சாராயம் விற்பனை செய்து வருகின்றனர்.

அதாவது அந்த பகுதியில் உள்ள குடி பிரியர்கள் போன் செய்தால் உடனடியாக இருசக்கர வாகனத்தில் வந்து மது பிரியர்களுக்கு ஒரு பாக்கெட் ரூ.50-க்கு விஷ சாராயம் விற்பனை செய்து வருவதாகவும், அதை குடித்து அப்பகுதியில் குடி பிரியர்கள் உயிரிழந்து வருகின்றனர் என குற்றஞ்சாட்டு எழுந்துள்ள நிலையில், நேற்று இரவு வள்ளி மதுரம் கிராமத்தில் சபரிநாதன் (36 )தாண்டான் (50) ஆகிய இவர்கள் விஷ சாராயம் குடித்ததால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் இப்பகுதி மக்கள் பாக்கெட் (விஷ)சாராயம் விற்பதை தடுக்க வேண்டும் என நீண்ட நாட்களாக போலீஸாரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையினர் அலட்சியம் காட்டி வருவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் இருசக்கர வாகனத்தில் இப்பகுதியில் விஷ சாராயம் விற்பனை செய்து வருவதால் திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

47 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

உலகம்

3 hours ago

வணிகம்

3 hours ago

சினிமா

4 hours ago

மேலும்