மன்னார்குடி அருகே ஒரே குடும்பத்தில் மஞ்சள்காமாலைக்கு 2 குழந்தைகள் உயிரிழப்பு: சுகாதாரத் துறையினர் மருத்துவ முகாம்

By செய்திப்பிரிவு

மன்னார்குடி அருகே மஞ்சள் காமாலை நோய் தாக்கி அண்ணன்,தம்பி அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தலையாமங்கலம் பாரதியார் நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார், கார் ஓட்டுநர். இவரது மனைவி நிஷாந்தினி. இவர்களது மகன்கள் ஜஸ்வின்(4), அஸ்ரத்(3).

இவர்களில் ஜஸ்வினுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு, மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மஞ்சள் காமாலை நோய் தாக்கியதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மேல்சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் ஜஸ்வின் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், சிவக்குமாரின் 2-வது மகன் அஸ்ரத்துக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மன்னார்குடிஅரசு மருத்துவமனையில் பரிசோதித்தபோது, அவரும் மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, 2 பேரும் தஞ்சை ராஜாமிராசுதார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில்,ஜஸ்வின் சிகிச்சை பலனின்றிநேற்று முன்தினம் இறந்தார். தொடர்ந்து, அஸ்ரத்தும் நேற்று காலை உயிரிழந்தார்.

இதற்கிடையே, மாவட்ட ஆட்சியர் ஆனந்த் உத்தரவின்பேரில், தலையாமங்கலம் பகுதி மக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள 2 மருத்துவர்களை கொண்ட 12 பேர் குழு சென்றுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

11 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்