குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக புதுச்சேரியில் பாஜகவினர் நடத்திய பேரணியில் பாமக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை.
புதுச்சேரி சுதேசி பஞ்சாலையில் இருந்து தொடங்கிய இப்பேரணிக்கு பாஜக மாநிலத் தலைவரும், நியமன எம்எல்ஏவுமான சாமிநாதன் தலைமை தாங்கினார். நியமன எம்எல்ஏக்கள் செல்வகணபதி, சங்கர் மற்றும் கூட்டணி கட்சிகளான பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பேரணியில் பங்கேற்றவர்கள், குடியுரிமைச் சட்டத்தின் மூலம் தீவிரவாதம், அந்நிய ஊடுருவல் தடுக்கப்படும் என்ற கருத்துகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பியபடி சென்றனர். அண்ணா சாலை, நேருவீதி வழியாக சென்றபேரணி தலைமை அஞ்சல் நிலையம் அருகே நிறைவடைந்தது.
கூட்டணியில் உள்ள பிரதான எதிர்கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அதிமுக இந்தப்பேரணியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
வணிகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
10 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
க்ரைம்
5 hours ago