எங்களது பிராண்ட் எப்போது மாறும்? - அருண் பாண்டியன் கேள்வி

By செய்திப்பிரிவு

எங்களது பிராண்ட் எப்போது மாற்றப்படும் என தேமுதிக அதிருப்தி எம்எல்ஏவான அருண்பாண்டியன், முதல்வர் ஜெயலலிதாவிடம் கேள்வி எழுப்பினார்.

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும், நடிகர் சிவாஜி கணேசனுக்கு அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

அதற்கு நன்றி தெரிவித்து பேசிய அருண் பாண்டியன், ‘‘சிவாஜி கணேசனின் பாதிப்பு இல்லாமல் யாரும் நடிக்க முடியாது. அவருக்கு மணிமண்டபம் அமைப்பதன் மூலம் முதல்வர் ஜெயலலிதாவை தமிழ்த் திரையுலகம் என்றுமே மறக்காது. கடைசியாக ஒரேயொரு கோரிக்கை.. எங்களது பிராண்ட் எப்போது மாற்றப்படும்?’’ என்று கேட்டார். அப்போது அவையில் பலத்த சிரிப்பொலி எழுந்தது.

அருண் பாண்டியன் உள்ளிட்ட 8 தேமுதிக எம்எல்ஏக்கள், அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால், சட்டப்பேரவையில் இவர்கள் தேமுதிக உறுப்பினர்களாகவே கருதப்பட்டு வருகின்றனர். இதை வைத்துதான், அருண் பாண்டியன் எங்களது பிராண்ட் எப்போது மாற்றப்படும் என கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 min ago

தொழில்நுட்பம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

சினிமா

12 hours ago

மேலும்