எங்களது பிராண்ட் எப்போது மாற்றப்படும் என தேமுதிக அதிருப்தி எம்எல்ஏவான அருண்பாண்டியன், முதல்வர் ஜெயலலிதாவிடம் கேள்வி எழுப்பினார்.
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும், நடிகர் சிவாஜி கணேசனுக்கு அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அதற்கு நன்றி தெரிவித்து பேசிய அருண் பாண்டியன், ‘‘சிவாஜி கணேசனின் பாதிப்பு இல்லாமல் யாரும் நடிக்க முடியாது. அவருக்கு மணிமண்டபம் அமைப்பதன் மூலம் முதல்வர் ஜெயலலிதாவை தமிழ்த் திரையுலகம் என்றுமே மறக்காது. கடைசியாக ஒரேயொரு கோரிக்கை.. எங்களது பிராண்ட் எப்போது மாற்றப்படும்?’’ என்று கேட்டார். அப்போது அவையில் பலத்த சிரிப்பொலி எழுந்தது.
அருண் பாண்டியன் உள்ளிட்ட 8 தேமுதிக எம்எல்ஏக்கள், அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால், சட்டப்பேரவையில் இவர்கள் தேமுதிக உறுப்பினர்களாகவே கருதப்பட்டு வருகின்றனர். இதை வைத்துதான், அருண் பாண்டியன் எங்களது பிராண்ட் எப்போது மாற்றப்படும் என கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 min ago
தொழில்நுட்பம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
சினிமா
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
சினிமா
12 hours ago