தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது தமிழகத்தை ஒட்டி வங்கக் கடலில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் இல்லாத சூழ்நிலையில் பெரிய அளவில் வானிலை மாற்றம் எதுவும் இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்:
“சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும். மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதும் இல்லை. கடந்த 24 மணிநேரத்தில் குறிப்பிடத்தக்க மழை தமிழகத்தில் பெய்யவில்லை.
இலங்கைக்கு தென்கிழக்கே தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. உள் மாவட்டங்களில் பொதுவாக வறண்ட வானிலை நிலவும்”.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
18 mins ago
விளையாட்டு
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
க்ரைம்
2 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
க்ரைம்
3 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
சுற்றுலா
5 hours ago