பெண்களிடம் முறைதவறி நடந்ததாக புகார்: விஏஓ திடீர் இடமாற்றம்

By செய்திப்பிரிவு

விருதுநகர்

பெண்களிடம் முறைதவறி நடந்துகொண்டதாக புகார் கூறப்பட்ட கூரைக்குண்டு விஏஓ திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் அருகே உள்ள கூரைக்குண்டு ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராகப் பொறுப்பு வகித்து வந்தவர் எஸ்.மாரியப்பன். இவர் விருதுநகர் வட்டத்தில் பணியாற்றி வரும் பெண் விஏஓக்களிடம் பாலியல் ரீதியாகவும், பெண்மைக்கு களங்கம் விளைக்கும் வகையிலும் நடந்துகொள்வதாக மாவட்ட ஆட்சியரிடம் பெண் விஏஓக்கள் புகார் அளித்தனர்.

இப்புகாரையடுத்து, கூரைக்குண்டு விஏஓ எஸ்.மாரியப்பனை திருச்சுழி அருகே உள்ள எருமைக்குளம் கிராம விஏஓவாக பணியிட மாற்றம் செய்து கோட்டாட்சியர் செல்லப்பா உத்தரவிட்டுள்ளார். மேலும், கூரைக்குண்டு ஊராட்சிக்கு பொறுப்பு கிராம நிர்வாக அலுவலரை நியமிக்கும் வரை விருதுநகர் வட்டாட்சியருக்கு அதிகாரம் வழங்கியும் கோட்டாட்சியர் செல்லப்பா உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்