சென்னை
ஹரியாணா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் வெற்றி பெற்றதற்காக, பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணா மாநிலங்களில் கடந்த 21-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் மொத்தம் 288 இடங்கள் உள்ளன. ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை. இந்நிலையில், ஆளும் பாஜக-சிவசேனா கூட்டணி 161 இடங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக ஆட்சி அமைக்கிறது. இதில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வென்றது.
அதேபோன்று, ஹரியாணா சட்டப்பேரவையில் மொத்தம் 90 இடங்கள் உள்ளன. ஆட்சி அமைக்க 46 இடங்கள் தேவை. இந்நிலையில், ஆளும் பாஜக 40 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், இரு மாநிலங்களிலும் வென்றுள்ள பாஜகவுக்கு, முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று (அக்.25) தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், "முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணா மாநில சட்டப்பேரவை பொது தேர்தலில், பாஜக வெற்றி பெற்றதையடுத்து, பிரதமர் மோடிக்கு தனது நல்வாழ்த்துகளை தெரிவித்தார்," என குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
3 mins ago
இந்தியா
24 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago