விபத்துகளில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 13 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், சமீபத்தில் வெவ்வேறு விபத்துகளில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

நாகை, மதுரை, திருவண்ணாமலை, தருமபுரி, திருவள்ளூர், திருச்சி, புதுக்கோட்டை, கோயம்புத்தூர், சிவகங்கை, தஞ்சாவூர், திண்டுக்கல், திருவாரூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் சமீபத்தில் பல்வேறு விபத்துகளில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 13 நபர்களின் குடும்பத்துக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, முதல்வர் பழனிசாமி இன்று (அக்.19) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், வெவ்வேறு விபத்துகளில் உயிரிழந்த 13 நபர்களின் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்த 13 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

12 mins ago

இந்தியா

41 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

மேலும்