மதுரை
தமிழகத்தில் மதமாற்ற தடை சட்டம் நிறைவேற்றக்கோரி தாக்கலான மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் 2002-ல் மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
பின்னர் ஓட்டு வங்கிக்காக அந்த சட்டத்த்தை அரசு திரும்ப பெற்றது. இதையடுத்த அந்த அமைப்புகள் மத மாற்ற நடவடிக்கையில் தீவிரமாக செயல்படுகிறது.
மதுரை, திண்டுக்கல், பரமக்குடி, திண்டுக்கல், கும்பகோணம், நெல்லை மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சவுராஷ்டிரா சமூகத்தினர் கிறிஸ்தவர்களாக மாறியுள்ளனர். எனவே தமிழகத்தில் மத மாற்றத்துக்கு தடை விதித்து சிறப்பு சட்டம் கொண்டு வர தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் இன்று (அக்.14) விசாரணைக்கு வந்தது.
பின்னர், சட்டம் நிறைவேற்றுமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. மேலும் மனுதாரரின் புகாருக்கு உரிய ஆதாரங்களை தாக்கல் செய்ய முடியாது. இதனால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
வலைஞர் பக்கம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
இந்தியா
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago