நாமக்கல்லில் சோகம்; காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர்.

பரமத்தி வேலூரில் ஜவுளி வியாபாரம் செய்து வருபவர் சரவணன். இவரது மனைவி வசந்தி. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சரவணன், அவரது மனைவி வசந்தி, குழந்தை, தந்தை கேசவன், தாய் கண்ணம்மாள் மற்றும் நண்பர் ராஜேந்திரன் ஆகிய ஆறு பேரும் இன்று (செப்.21) புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு எருமப்பட்டி அடுத்துள்ள தலைமலை கோயிலுக்கு சாமி தரிசனம் செய்யச் சென்றனர்.

தரிசனம் முடிந்து திரும்பி வரும்போது நாமக்கல்லில் இருந்து பெரம்பலூர் நோக்கிச் சென்ற லாரியும் காரும் நேருக்கு நேர் மாணிக்கவேலூர் என்ற பகுதியில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த வசந்தியைத் தவிர மற்ற 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

விபத்து நிகழ்ந்த இடத்தில் லாரி

உயிருக்கு ஆபத்தான நிலையில், வசந்தி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பார்த்திபன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்