வேட்டை தடுப்பு காவலர்களுக்கு ரூ.2,500 ஊதிய உயர்வு: ஏப்ரல் முதல் அமல்படுத்த அரசாணை

By செய்திப்பிரிவு

சென்னை

தமிழக வனத் துறையில் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் 1,119 வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கு ரூ.2,500 ஊதிய உயர்வு வழங்கி, அதை கடந்த ஏப்ரல் மாதம் முதல் கணக்கிட்டு வழங்குவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக வனத் துறையில், வனவிலங்குகளை வேட்டையில் இருந்து பாதுகாக்கவும், மரங்கள் கடத்துவதைத் தடுக்கவும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர் களுக்கான தொகுப்பூதியம் ரூ.6,750 லிருந்து ரூ.10 ஆயிரமாக கடந்த 2017-ம் ஆண்டு உயர்த்தப் பட்டது. இந்நிலையில், அவர்களது பணியைக் கருத்தில் கொண்டு தொகுப்பூதியத்தை மேலும் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, கடந்த ஜூலை யில் சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் பழனிசாமி, ‘‘வன வளங் களைப் பாதுகாக்க தமிழக வனத் துறையில் 1,119 வேட்டைத்தடுப்பு காவலர்கள் பணியாற்றி வருகின் றனர். இவர்களில் பெரும்பான் மையோர் மலைவாழ் பழங்குடி இனத்தை சார்ந்தவர்களாக இருப் பதுடன், அடர்ந்த வனப்பகுதி களில் மரங்கள் திருட்டு, வேட்டை யாடுதல், நக்சல்பாரிகள் ஊடுரு வலைத் தடுத்தல் ஆகிய பணி களை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்பணியாளர்கள் வனத்துக் குள் மிகுந்த சிரமத்தின் மத்தி யில் பணிபுரிந்து வருவதால் இவர் களின் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.12,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து, 1,119 வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரத்து 500 ஆக ஊதியம் உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பள உயர்வால் ஆண்டுக்கு ரூ.3 கோடியே 35 லட்சத்து 70 ஆயிரம் கூடுதல் செலவினம் ஏற்படும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

27 mins ago

சினிமா

32 mins ago

இந்தியா

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்