வாலாஜா மணமக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கடிதம்

By செய்திப்பிரிவு

வாலாஜா 

வாலாஜாவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வட்டார சுகாதார ஆய் வாளரின் மகளின் திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி கடிதம் அனுப்பியுள்ளார்.

வேலூர் மாவட்டம் வாலா ஜாவைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற வட்டார சுகாதார ஆய்வாளர் ராஜசேகரன். இவரது மகள் மருத்துவர் டி.ஆர்.ராஜஸ்ரீ, சேலத்தைச் சேர்ந்த மருத்துவர் எஸ்.சுதர்ஸன் ஆகியோருக்கு ராணிப்பேட்டையில் நாளை (11-ம் தேதி) காலை திருமணம் நடைபெற உள்ளது. இவர்களின் திருமணத்துக்கு பிரதமர் மோடி, வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். இந்தக் கடிதத் தால் மணமக்கள் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து ராஜசேகரன் கூறும்போது, ‘‘ஒரு வலிமையான பிரதமரை நாம் பெற்றுள்ளோம். அவர், எனது மகளின் திருமணத்துக்கு வந்து வாழ்த்த வேண்டும் என்று விரும்பினேன். இதற்காக, மணமக்கள் குறித்த விவரங்களுடன் திருமணத்துக்கு வருமாறு அழைப்பிதழை அனுப்பி வைத்தேன். நான் அனுப்பிய கடிதத்துக்கு மதிப்பளித்து, கடுமையான பணிச் சூழலிலும் எனது மகளுக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. பிரதமர் மோடியின் கடிதத்தால் எனது மகளும் குடும்பத்தினரும் மகிழ்ச்சியுடன் உள்ளனர். திருமணத்துக்குப் பிறகு எனது மகள் கிராமப்புறத்தில் தங்கி மருத்துவப் பணியாற்ற உள்ளார்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

7 mins ago

இந்தியா

36 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

மேலும்