சென்னை
சென்னையில் இன்று 2 ஆயிரத் துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளன. இதையொட்டி, 10 ஆயிரத் துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 2-ம் தேதி விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதை யொட்டி, சென்னை மாநகரம் முழு வதும் காவல் துறையின் அனுமதி பெற்று பொது இடங்களில் 2,602 விநாயகர் சிலைகள் வைக்கப்பட் டன.
இந்த சிலைகள் கடந்த 2 நாட் களாக கடலில் கரைக்கப்பட்டு வருகின்றன. இதற்காக எண்ணூர் ராமகிருஷ்ணா நகர், திருவொற்றி யூர் பாப்புலர் எடை மேடை பின் புறம், காசிமேடு மீன்பிடி துறை முகம், பட்டினப்பாக்கம் சீனிவாச புரம், நீலாங்கரை பல்கலை நகர் ஆகிய 5 இடங்களை காவல் துறை தேர்வு செய்துள்ளது. மேற் கண்ட இடங்களில் மட்டுமே சிலை களை கரைக்க வேண்டும் என்று பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட் டுள்ளது.
அந்த இடங்களில் மாநகர காவல் மற்றும் சென்னை மாநக ராட்சி சார்பில் ராட்சத கிரேன் கள், படகுகள், உயிர் காக்கும் குழுக் கள், நீச்சல் வீரர்கள், மருத்துவக் குழுக்கள், கடற்கரையில் சிலை களை எளிதாக கொண்டு செல்ல டிராக் வசதிகள் உள்ளிட்ட முன்னேற் பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2 நாட்களாக குறை வான சிலைகளே கடலில் கரைக்கப் பட்டன. இன்று 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட லாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விநாயகர் சிலை ஊர்வலப் பாதைகளிலும், சிலை கரைக்கும் இடங்களிலும், சென்னை மாநகர காவல் துறை சார்பில் சுமார் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
விளையாட்டு
3 hours ago
க்ரைம்
3 hours ago
உலகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
வேலை வாய்ப்பு
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
கல்வி
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago