நல்லிணக்கத்துக்கு எதிராக செயல்படும் திமுக: தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர்

சமூக, சமய நல்லிணக்கத்துக்கு எதிராக திமுக செயல்படுவதாக தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

தஞ்சாவூரில் நேற்று செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது: பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு ரீதியான தேர்தல் நடைபெறவுள் ளது. இதற்காக தஞ்சாவூரில் ஆலோ சனைக் கூட்டம் நடைபெறுகிறது.

முன்னாள் அமைச்சர் ப.சிதம் பரத்தின் மீது விமானத் துறை வழக்கு உட்பட பல்வேறு ஊழல் கள் உள்ளன. அவருக்கு உறு துணையாக இருப்போம் என ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் கூறியிருக்கின்றனர். ஒட்டுமொத்த மாக ஊழல் ஆட்சியை காங்கிரஸ் நடத்தியது. அதனால்தான் ப.சிதம் பரத்துக்குப் பின்னால் எல்லோரும் இருக்கின்றனர்.

யாரையும் பழிவாங்க வேண்டும் என்பது பாஜகவின் நோக்கம் அல்ல. ப.சிதம்பரம் அதிகாரப்பூர்வமாக தவறு செய்தவர். மக்கள் கொடுத்த வாய்ப்பைத் தனது குடும்பம் லாபம் அடைவதற்காகப் பயன்படுத்தி னார். இந்த அடிப்படையில்தான் அவர் மீது விசாரணை நடத்தப் படுகிறது. எனவே, இந்த விஷயத் தில் எந்தப் பழிவாங்கும் நடவடிக் கையும் கிடையாது. ப.சிதம்பரம் 27 மணிநேரம் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தார். அவ்வாறு இருந்துவிட்டு தலைமறைவாக வில்லை என அவர் கூறுவதை யார் நம்புவார்கள்.

டெல்லியில் காஷ்மீர் பிரச்சினைக்காக திமுக ஆர்ப் பாட்டம் நடத்துகிறது. இது, நிச்ச யமாகத் தோல்வியை அடையக் கூடிய ஆர்ப்பாட்டம். இதை மக்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். திமுக தொண்டர்களே ஏற்றுக் கொள்ள வில்லை. திமுக சமூக, சமய நல்லி ணக்கத்துக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. இதனால், திமுக தனிமைப்படுத்தப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

இந்தியா

15 mins ago

தமிழகம்

46 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்