மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115 அடியாக உயர்வு

By செய்திப்பிரிவு

சேலம்

மேட்டூர் அணை நீர் மட்டம் 115.43 அடியாக உயர்ந்துள்ளது.

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த வாரங்க ளில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகபட்சமாக விநாடிக்கு 2.53 லட்சம் கனஅடி வந்தது. இதனால், கடந்த 13-ம் தேதி அணையின் நீர்மட் டம் 100 அடியை எட்டியது. பின்னர் மழை குறைந்ததைத் தொடர்ந்து அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்தது.

இந்நிலையில், நேற்று முன் தினம் காலை அணை நீர் மட்டம் 113.45 அடி, நீர்வரத்து விநாடிக்கு 27 ஆயிரம் கனஅடியாக இருந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து விநாடிக்கு 33 ஆயிரம் கனஅடியாகவும், நீர் மட்டம் 114.85 அடியாகவும், நீர் இருப்பு 85.49 டிஎம்சியாகவும் இருந்தது.

பகல் 12 மணிக்கு விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இரவு 8 மணி அளவில் 30 ஆயிரம் கனஅடியானது. நீர் இருப்பு 86.36 டிஎம்சி-யாக இருந் தது. டெல்டா பாசனத்துக்கு விநா டிக்கு 10 ஆயிரம் கனஅடியும், கால் வாய் பாசனத்துக்கு 500 கனஅடி யும் நீர் திறக்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

வணிகம்

21 mins ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

51 mins ago

இந்தியா

45 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

53 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்