தேசிய மருத்துவ ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் இன்று (திங்கள்கிழமை) சவப்பெட்டியுடன் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள், மருத்துவ மாணவர் விக்னேஷ்வர் தலைமையில் இன்று ‘டீன்’ அலுவலக நுழைவு வாயிலின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். சவப்பெட்டியுடன் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவக்கல்லூரியில் கொண்டு வரப்போகும் நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மருத்துவப்பாடங்களில் இணைப்புப் பாடங்களை அனுமதிக்கக்கூடாது, இந்திய மருத்துவ கவுன்சிலிற்கு மாற்றாக தேசிய மருத்துவ ஆணையத்தை கொண்டு வரக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 mins ago
இந்தியா
12 mins ago
இந்தியா
18 mins ago
இந்தியா
25 mins ago
தமிழகம்
18 mins ago
இந்தியா
36 mins ago
க்ரைம்
53 mins ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
52 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
3 hours ago