மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்ததற்காக திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு ஆலந்தூரில் இன்று பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
தென்சென்னை மாவட்ட திமுக சார்பில், மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்ததற்காக திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஆலந்தூர் நீதிமன்றம் எதிரில் உள்ள தேசிய இளை ஞர் விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று மாலை 3 மணிக்கு விழா நடை பெறுகிறது. இதற்காக மெட்ரோ ரயில் வடிவில் மேடை அமைக்கப்பட்டுள்ளது.
பாராட்டு விழாவுக்கு தென் சென்னை மாவட்டச் செய லாளரும், முன்னாள் மேயரு மான மா.சுப்பிரமணியன் தலைமை வகிக்கிறார். கருணாநிதி, ஸ்டாலின், திமுக முதன்மைச் செயலாளர் துரை முருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் இக்கூட்டடத்தில் பங்கேற்கின்றனர்.
பாராட்டு உரை
திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஆகியோரை பாராட்டி அவர்கள் உரையாற்றுகின்றனர்.
கோயம்பேடு-ஆலந்தூர் இடையேயான மெட்ரோ ரயில் திட்டத்துக்கு வித்திட்டது யார் என்பது தொடர்பாக திமுக, அதிமுக இடையே அறிக்கைப் போர் நடந்துவருகிறது.
இந் நிலையில், கருணாநிதி, ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெறவுள்ளது குறிப் பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
39 secs ago
இந்தியா
42 mins ago
விளையாட்டு
37 mins ago
இணைப்பிதழ்கள்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இணைப்பிதழ்கள்
1 hour ago
இணைப்பிதழ்கள்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
கருத்துப் பேழை
2 hours ago