அம்பத்தூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பணிமனை உதவியாளர் பணிக்கு வரும் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூரில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, காலியாக உள்ள ஒரு பணிமனை உதவியாளர் (மின்சாரப் பணியாளர்) பணியிடத்தை அரசு நிரப்ப உள்ளது.
என்.டி.சி மற்றும் என்.ஏ.சி தொழில்நுட்ப தகுதி பெற்ற, முன் அனுபவம் உள்ள, 2013 ஜூலை 1-ம் தேதியில் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிக பட்சமாக 32 வயதுக்குள் உள்ளவர் இந்த பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் பிரிவுகளைச் சேர்ந்தோருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. தகுதியுள்ளவர்கள் உரிய சான்றுகளுடன் வரும் 20-ம் தேதிக்குள் துணை இயக்குநர் / முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அம்பத்தூர், சென்னை - 600098. (தொலைபேசி எண்: 044-26252453) என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
சினிமா
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
சினிமா
10 hours ago
இந்தியா
10 hours ago