ஒத்தக்கடை அருகே மகனை எரித்து கொன்ற தாய் கைது; ஆடம்பர செலவுக்கு பணம் கேட்டதால் நேர்ந்த விபரீதம்

By செய்திப்பிரிவு

மதுரை 

ஆடம்பரச் செலவுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை தீவைத்து எரித்துக் கொன்ற தாயை போலீஸார் கைது செய்தனர்.

ஒத்தக்கடை அருகிலுள்ள காளிகாப்பானைச் சேர்ந்தவர் பாண்டிக்காளை (55). இவரது மனைவி சரோஜா (50). இவர்களது மூத்த மகன் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வருகிறார்.

இளைய மகன் அஜித்குமார் (21), கே.கே.நகர் பகுதியிலுள்ள கல்லூரி ஒன்றில் பி.காம். படித்தார். பாண்டிக்காளை, உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வருகிறார். சரோஜா சலவையகத்தில் கூலி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 18-ம் தேதி அஜித்குமாருக்கும், சரோஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சரோஜா, இரவில் தூங்கிக் கொண்டிருந்த அஜித்குமார் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துவிட்டார். படுகா யமடைந்த அஜித்குமார், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். இது தொடர்பாக ஒத்தக்கடை போலீஸார், சரோஜா மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர். சிகிச்சை பலனின்றி அஜித்குமார் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதையடுத்து கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீ ஸார் கூறியதாவது:

கல்லூரியில் படித்த அஜித் குமார், தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆடம்பரச் செலவு செய்து வந்துள்ளார். மகன்களை படிக்க வைக்க சரோஜா ஏற்கெனவே ரூ.3 லட்சம் வரை பிறரிடம் கடன் வாங்கி இருக்கிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பைக் வாங்கித் தருமாறு சரோஜாவை அஜித்குமார் தொந்தரவு செய்து ள்ளார். வேறுவழியின்றி சரோஜா கடன் பெற்று பைக் வாங்கி தந்துள்ளார். இந்நிலையில், கடந்த 18-ம் தேதி செலவுக்கு ரூ.40 ஆயிரத்தைத் தருமாறு அஜித்குமார் கேட்டுள்ளார். ரூ.10 ஆயிரத்தை ஒருவரிடம் கடன் வாங்கிய சரோஜா, அதை மகனிடம் கொடுத்துள்ளார். அதிருப்தியடைந்த அஜித்குமார் தாயாரிடம் தகராறில் ஈடுபட் டுள்ளார். இதனால் சரோஜா வேதனையடைந்தார். அன்று இரவு மூத்த மகன் ஒரு அறை யிலும், மற்றொரு அறையில் பாண்டிக்காளை, சரோஜா, அஜித்குமார் ஆகி யோரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, நள்ளிரவில் ஒருவர் கூப்பிடுகிறார் எனக் கூறி, கணவரை சரோஜா வெளியே அனுப்பியுள்ளார். பின்னர், தூங்கிக்கொண்டிருந்த அஜித்குமார் மீது மண்ணெண் ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார் என்று போலீஸார் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

13 mins ago

தமிழகம்

59 mins ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்