போளூர் அருகே 4 வயது சிறுவனுக்கு மது ஊற்றி குடிக்க வைத்த தாய்மாமன் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள மேல்சோழங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தனும் அவரது மனைவி ஈஸ்வரியும் சென்னையில் கட்டுமானத் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர் களது 4 வயது மகன், ஈஸ்வரியின் தந்தை சின்னபையன், பாட்டி முனியம்மாள் பராமரிப்பில் உள்ளான்.
அந்த சிறுவனுக்கு, இளை ஞர்கள் சிலர் மது ஊற்றிக் கொடுத்துள்ளனர். அந்த காட்சி, ‘வாட்ஸ் அப்’ மற்றும் ‘பேஸ் புக்’கில் பரவியது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு தி.மலை ஆட்சியர் அ.ஞானசேகரன் உத்தரவிட்டார். அதன்படி, 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஆனந்தனின் தாய் மல்லிகா கொடுத்த புகாரின்பேரில் கடலாடி காவல் ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் போலீஸார் குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டம் மற்றும் கொலை முயற்சி உட்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
சிறுவனுக்கு மது ஊற்றி குடிக்க வைத்ததாக மேல்சோழங்குப்பம் கிராமத்தில் வசிக்கும் ஏழுமலை, பிரேம்குமார் ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரைத் தேடி வந்தனர். இதற்கிடையில் மது ஊற்றி கொடுப்பதற்கு துணையாக இருந்த தாய்மாமன் முருகன் (23) நேற்று கைது செய்யப்பட்டார். ஆதமங்கலம்புதூர் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த அவரை தனிப்படை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
29 mins ago
உலகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
வேலை வாய்ப்பு
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
கல்வி
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
வாழ்வியல்
3 hours ago
தமிழகம்
4 hours ago