காஞ்சிபுரம் ஓரிகையில் சங்கர நேத்ராலயாவின் இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம்

By செய்திப்பிரிவு

சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை வரும் ஜூன் 6-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாமை நடத்துகிறது. ஜூன் 11-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த முகாமில் முற்றிலும் இலவசமாக கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், சங்கர நேத்ராலயா, SSSM ட்ரஸ்ட், KUEHNE + NAGEL இணைந்து நடத்தும் இந்த முகாம், ஸ்ரீமஹா ஸ்வாமிகள் மணிமண்டபம், ஓரிகை, காஞ்சிபுரத்தில் நடக்கிறது. பரிசோதனையில் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஜூன் 9-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை அறுவை சிகிச்சை செய்யப்படும்.

அறுவை சிகிச்சைக்கு வருபவர்களுக்கு ஆபரேஷன், லென்ஸ் கண்ணாடி மற்றும் மருந்து என அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. தையல் இல்லாத முறையில் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவுக்கு 9952945758, 9500197769, 044-6727446 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

49 secs ago

வாழ்வியல்

32 mins ago

உலகம்

30 mins ago

தமிழகம்

40 mins ago

இந்தியா

43 mins ago

சினிமா

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்