கர்நாடக அரசு தவறினால் ஜெ. விடுதலை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன்: சுப்பிரமணியன் சுவாமி

By செய்திப்பிரிவு

ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யாவிட்டால் நான் செய்வேன் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னை சாந்தோமில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலை சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது:

"ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரியவந்துள்ளது. ஒரு வேளை கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யாவிட்டால் நான் மேல்முறையீட்டுக்குப் போவேன்.

தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பாக பிரதமர் மோடிக்கு அடிக்கடி குறை சொல்லி ஜெயலலிதா கடிதம் எழுதி வந்தார். என்னையும் குறை சொல்லி கடிதம் எழுதினார். நரேந்திர மோடி பள்ளிக்கூட முதல்வர் அல்ல, நான் மாணவனும் அல்ல. ஜெயலலிதாவின் கடிதங்கள் கோபத்தைத்தான் ஏற்படுத்தின" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

கருத்துப் பேழை

13 mins ago

சினிமா

2 hours ago

கல்வி

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்