அண்ணா சாலை பச்சையம்மன் கோயில் கும்பாபிஷேகம்

By செய்திப்பிரிவு

சென்னை அண்ணா சாலை பச்சையம்மன் கோயில் கும்பா பிஷேகம் 50 ஆண்டுகளுக்குப் பின் நேற்று நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

சென்னை அண்னா சாலை எல்ஐசி கட்டிடம் அருகே பழமை வாய்ந்த பச்சையம்மன் கோயில் உள்ளது.

இந்த கோயிலுக்கு பல்வேறு காரணங்களால் சுமார் 50 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருந்தது.

இந்நிலையில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை கோயிலுக்கான திருப்பணியை மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்பேரில் கோயிலின் கும்பாபிஷேகம் நேற்று காலை 8.30 மணியளவில் நடந்தது. மேலும் மாலையில் உற்சவர் வீதி உலா வெகு விமர்சையாக நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தி.பரஞ்சோதி, செயல் அலுவலர் சு.ராஜா இளம்பெருவழுதி, தக்கார் சந்திரசேகரன் உள்ளிட்ட துறை அதிகாரிகளும் திரளான பக்தர்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

59 mins ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

3 hours ago

உலகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

வேலை வாய்ப்பு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

கல்வி

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்