வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஆஸ்திரேலிய பறவை ஜோடியை பள்ளி மாணவர் ஒருவர் தானமாக வழங்கினார்.
மயிலாப்பூரில் தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் டூ படிக்கும் கிருஷ்ணா என்ற மாணவர், ஆஸ்தி ரேலிய பறவை ஜோடியை வண்ட லூர் உயிரியல் பூங்காவுக்கு நேற்று தானமாக வழங்கினார்.
இதுபற்றி அவர் கூறியதாவது:
எனக்கு பறவைகள் வளர்ப் பதில் அதிக ஆர்வம் உள்ளது. அதனால் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த ‘கிரே காக்கடைல்’ என்ற பறவை ஜோடியை விலைக்கு வாங்கி வளர்த்து வந்தேன். எனது பெற்றோர் வேலை விஷயமாக வெளியில் சென்றுவிடுகின்றனர். நான் பள்ளிக்கு சென்று விடுகிறேன். இதனால் இந்த பறவைகளை பராமரிக்க முடியாத தால் அவற்றை வண்டலூர் பூங்கா வுக்கு தானமாக கொடுத்துள் ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக வண்டலூர் உயிரியல் பூங்காவை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “இப்பூங்காவில் இதே வகையைச் சேர்ந்த 20 பறவைகள் உள்ளன. இது போன்று யாராவது பராமரிக்க முடியாமல் தானமாக வழங்கினால் பெற்றுக் கொள்வோம்” என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
3 hours ago
வணிகம்
11 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
சுற்றுலா
4 hours ago
கல்வி
3 hours ago