மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்ததாக புகார்: 6 ஆசிரியர்கள் உட்பட 8 பேர் கைது

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி களக்காடு அருகே கீழப்பத்தை பண்டிதன்குறிச்சி இந்து உயர்நிலைப் பள்ளியில் கழிவறைகள் தாழ்த்தப்பட்ட மாணவர்களைக் கொண்டு சுத்தம் செய்யப்படுவதாகவும், ஆசிரியர் களுக்கு பயந்து மாணவர்களும் கழிவறைகளை சுத்தம் செய்வதாக வும் புகார் எழுந்தது. பெற்றோர் சார்பில் கடந்த 17-ம் தேதி களக்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் நடவடிக்கை எடுக்காததால், திரு நெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம், பல்வேறு அமைப்புகள் சார்பில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன.

இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளி தாளாளர் சாலமன் ஜெபா, அவரது மனைவி யும் தலைமையாசிரியருமான ஜெயக்குமாரி, ஆசிரியர்கள் ஹெலன் அருள் எமிமாள், மேரி சுஜித்ரா, ஏஞ்சலின் ஸ்டெபி, ஜேக்கப், ஆக்னஸ், சரோஜா ஆகிய 8 பேரை களக்காடு போலீஸார் நேற்று கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

உலகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

வேலை வாய்ப்பு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்